வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய மேலும் மூவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சற்று முன்னதாக தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மற்றும் இந்தியாவில் இருந்து அண்மையில் நாடுதிரும்பிய மூவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 3 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 12 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 100 அக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 177 பேர் சிகிச்சை பெற்றுவருகையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து, இந்தியா, இலங்கை