Wednesday 24th of April 2024 06:56:53 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஐபிஎல்-2020: வோர்ணர் படைக்கு 164 வெற்றி இலக்கை நிர்ணயித்தது கோலி படை!

ஐபிஎல்-2020: வோர்ணர் படைக்கு 164 வெற்றி இலக்கை நிர்ணயித்தது கோலி படை!


ஐபிஎல்-2020 தொடரின் இன்றைய ஆட்டத்தில் வோர்ணர் படைக்கு எதிராக துடுப்பெடுத்தாடிய கோலி படை வெற்றி இலக்காக 164 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல்-2020 கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில் டேவிட் வோர்ணர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய விராட் கோலியின் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2020 சீசனின் 3-வது ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் படிக்கல் 42 பந்துகளை எதிர்கொண்டு எட்டு 4 ஓட்டங்கள் அடங்கலாக 56 ஓட்டங்களையும், ஏ.பி.டி.வில்லியர்ஸ் 30 பந்துகளை எதிர்கொண்டு நான்கு 4 ஓட்டங்கள், இரண்டு 6 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

அணித்தலைவர் விராட் கோலி 13 பந்துகளை சந்தித்த போதிலும் 14 ஓட்டங்களை மட்டும் பெற்று ஆட்டமிழந்து ஏமாற்றமளித்திருந்தார்.

தொடர்ந்து 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் ஒரு இலக்கை இழந்து 25 ஓட்டங்களைப் பெற்று ஆடிவருகிறது.

அணித்தலைவர் டேவிட் வோர்ணர் 6 பந்துகளில் 6 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE