Friday 19th of April 2024 02:18:27 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய்யுரைத்த ஹேமசிறி: உண்மையை கூறத் தயாராகும் மைத்திரி!

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய்யுரைத்த ஹேமசிறி: உண்மையை கூறத் தயாராகும் மைத்திரி!


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பற்றி கூறிய கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று அவரது பிரத்தியேக செயலாளர் சமீர டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பற்றி தெரிவித்த விடயங்கள் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதியைப் பற்றி ஹேமசிறி பெர்னாண்டோ கூறிய விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவையாகும். இவற்றை அவர் முற்றாக மறுத்துள்ளார். இவை உண்மையான கருத்துக்கள் அல்ல என்பதையும் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

சில வேளைகளில் எதிர்வரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் ஹேமசிறி பெர்னாண்டோவினுடைய கருத்துக்களின் உண்மைத் தன்மையை அதன்போது தெளிவுபடுத்துவார்" - என்றுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: மைத்திரிபால சிறிசேன, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE