Friday 29th of March 2024 09:19:46 AM GMT

LANGUAGE - TAMIL
.
இந்திய கடற்படையினர் இருவர் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

இந்திய கடற்படையினர் இருவர் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!


இலங்கை வந்திருக்கும் இந்திய கடற்படையிளர் இருவர் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு நேற்றைய தினம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாலைதீவில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 8 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ள இந்திய கடற்படையினர் இருவர் உள்ளிட்ட 12 பேருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவத்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 3 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மேலும் 12 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 100 அக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 186 பேர் சிகிச்சை பெற்றுவருகையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE