Thursday 18th of April 2024 10:04:30 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஒன்றாரியோவில் ஜூன் மாதத்தின் பின்  அதிக தொற்றுநோயாளர்கள் நேற்று பதிவு!

ஒன்றாரியோவில் ஜூன் மாதத்தின் பின் அதிக தொற்றுநோயாளர்கள் நேற்று பதிவு!


கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் புதிய கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்துக்குப் பின்னர் அதிகளவில் நேற்றுப் பதிவாகியுள்ளது.

நேற்று 425 புதிய தொற்றுநோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் – ஆம் திகதி 446 புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகினர். அதன் பின்னர் மிக அதிகளவு தொற்று நோயாளர்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.

புதிய தொற்று நோயாளர்களுடன் மாகாணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 274 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் நேற்று தொற்று நோய்க்கு மேலும் இருவா் உயிரிழந்தனர். இவா்களுடன் மாகாணத்தின் மொத்த கொரோனா மரணங்கள் 2,829-ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, மாகாணத்தில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 41 ஆயி்ரத்து 46 போ் குணமடைந்துள்ளனர்.

மாகாணத்தில் நேற்று வரையான கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் 31,753 கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒன்ராறியோவில் இதுவரை 35 இலட்சத்துக்குக் அதிகமான கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE