Saturday 20th of April 2024 10:00:17 AM GMT

LANGUAGE - TAMIL
-
கட்டுபாட்டை மீறியோர்  மூளையற்றவா்கள்  என ஒன்ராறியோ முதல்வா் போர்ட் விசனம்!

கட்டுபாட்டை மீறியோர் மூளையற்றவா்கள் என ஒன்ராறியோ முதல்வா் போர்ட் விசனம்!


ஒன்ராறியோவில் கோவிட்-19 தொற்று நோய் கட்டுப்பாடுகளை மீறுவோர் குறித்து மாகாண முதல்வர் டக் போர்ட் கடும் விசனம் வெளியிட்டார்.

இந்த வார இறுதியில் ஹாமில்டன் வாகன தரிப்பிடத்தில் பெரும் கூட்டம் கூட்டப்பட்டமை குறித்து நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது அவா் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.

இவ்வாறு சட்டவிரோதமாக ஒன்றுகூடியவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு விதிகளை மீறுவதன் மூலம் மக்களின் வாழ்க்கையை அவா்கள் ஆபத்தில் ஆழ்த்துகின்றனர் எனவும் அவா் கூறினார்.

ஒரு பெரும் நெருக்கடி நிலையின்போது இவ்வாறு மோசமாக நடந்துகொள்பவா்களை பரிசோதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவா்களின் மண்டைக்குள் மூளை என்ற ஒன்று இருக்கும் என நான் நம்பவில்லை எனவும் முதல்வர் டக் போர்ட் ஆத்திரத்துடன் கூறினார்.

ஒன்ராறியோ மாகாணம் முதுவதும் மூடப்பட்ட உட்புறங்களில் 10 பேரும், திறந்த வெளிப்புறங்களில் 25 பேருக்கும் மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்ட பின்னர் ஹாமில்டன் வாகன தரிப்பிட வெளியில் பெருமளவானவா்கள் ஒன்றுகூடியதாகவும் இதனையடுத்து அவா்கைளை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொறுப்பின்றி சட்டவிரோதமாக ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கானவா்கள் அதற்குப் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும். அவர்களுக்குத் தண்டம் விதிக்கப்படும் எனவும் முதல்வர் போர்ட் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE