Friday 19th of April 2024 06:19:48 PM GMT

LANGUAGE - TAMIL
.
20 இற்கு எதிராக இன்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

20 இற்கு எதிராக இன்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!


அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி இந்திக்க கால்லகே இந்த மனுவை இன்று பகல் தாக்கல் செய்துள்ளார்.

20ஆவது திருத்தமானது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலத்தில் நிறைவேற்றப்பட்டாலும், சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படாமல் அமுல்படுத்தக்கூடாது என்கின்ற முடிவை அறிவிக்கும்படியே மனுதாரர் உயர்நீதிமன்றில் தனது மனு ஊடாகக் கோரியுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் இன்று நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து மூன்று வாரங்களுக்குள் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கு முடிவை அறிவிக்க வேண்டும் என்பதே அரசமைப்பின் நியதியாகும்.

இருந்த போதிலும் உயர்நீதிமன்றம் ஒரு வாரத்திலும் தமது முடிவை அறிவிக்கலாம்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE