கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த கைதி ஒருவர் மற்றும் இந்திய நாட்டவர் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சற்று முன்னதாக அறிவித்துள்ளது.
குவைத்தில் இருந்து நாடுதிரும்பியவர்களில் மேலும் 7 பேர், சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் இருவர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் இருவர், இந்தியாவில் இருந்து வந்துள்ள இந்தியர் ஒருவர் மற்றும் கந்தகாடு போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் என 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 3 ஆயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மேலும் 18 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 118 அக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 181 பேர் சிகிச்சை பெற்றுவருகையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை