அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைளின்போது துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லிரைச்சல் கிழக்கு சலாம் பள்ளி பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன என்று விசேட அதிரடிப் படையினருக்கு இன்று முற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய உரைப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சொட்கண் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கத்திகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறீன் பீல்ட் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்திகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதாகியுள்ளார்.
கைதான சந்தேகநபரைக் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கிழக்கு மாகாணம், அம்பாறை