ஐபிஎல் 2020 தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிடம் 16 ஓட்டங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற சென்னை அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்கள் குவித்தது.. அந்த அணியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 9 சிக்ஸர்கள் விளாசி 74 ஓட்டங்கள் குவித்தார். சென்னையில் சாம் குரான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து, 217 ஓட்டங்கள் என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் முரளி விஜய் 21, வாட்சன் 33 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாம் குரான் அதிரடியாக இரண்டு சிக்ஸர்கள் விளாசி 17 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கெயிக்வாட் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஜாதவ் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் டுபிளசிஸ் அதிரடி காட்டி சிக்ஸர்களாக பறக்க விட்டார்.
டுபிளசிஸ் 72(37) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 36 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தோல்வி உறுதியான நிலையில், கடைசி ஓவரில் ஹட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டார் தோனி. அதில் ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Category: விளையாட்டு, புதிது
Tags: