யாழ்ப்பாணம் - புத்தூர் வீதியில் புத்தூர் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தூர் நோக்கிப் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்றும் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த இருவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய மற்றொருவர் சிறிய காயத்துக்கு உள்ளாகியுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்