Tuesday 16th of April 2024 03:30:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
20 இற்கு எதிராக சஜித் அணியும் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!

20 இற்கு எதிராக சஜித் அணியும் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அரசால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் அரசமைப்புக்கு முரணான வகையிலும், அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதனை நீக்கிக்கொள்ளுமாறு வலியுறுத்தி சபைக்குள் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது தாம் இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்றும், இதனைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE