புதிய அரசு கொண்டுவந்திருக்கும் அரசமைப்பின் 20ம் திருத்தத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்ட வரைவைச் சவாலுக்குட்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக இதுவரை 6 தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை