கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகத்தில் இருந்து பணி செய்வது குறித்து புதிய நேரக் கட்டுபாடுகளை அறிவிக்கும் விசேட சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள கிரம உத்தியோகத்தர்கள் அனைவரும் செவ்வாய்க் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் காலை 8.30 மணியில் இருந்து மாலை 4.15 மணி வரையும் சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும் அவரவர் அலுவலகத்தில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசேட சுற்று நிருபம் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.