திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தொடர்ந்தும் தடை விதித்துள்ள நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கும் 28ஆம் திகதி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்புப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
இது குறித்து இளங்கலைஞர் மண்டபத்தில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கதவடைப்பு போராட்டத்தில் இஸ்லாமிய மக்கள் பிரதிநிதிகளையும் மலையக மக்கள் பிரதிநிதிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்புவிடுக்கப்பட்டது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்