கல்வி பொது தராதர பத்திர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதனை நிறுத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் உயர் தர மாணவர்களுக்கும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதனை நிறுத்துமாறும்,
எதிர்வரு 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 05 ஆம் தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதனை நிறுத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.