பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக அவா் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எக்மோ மற்றும் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் எம்.ஜி.எம். மருத்துவா்கள் அவரது உடல் நிலையைத் தீவிரமாகக் கவனித்து வருகின்றனர் எனவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பியின் உலல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று முழுவதும் குணமடைந்துள்ளதாகவும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா