பலாலி அன்ரனிபுரத்தில் அமைந்துள்ள வனத்து அந்தோனியார் ஆலய இளையோருக்கான ஒன்றுகூடல் பலாலி அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
புனித வனத்து அந்தோனியார் திருவிழாவுக்கான ஆயத்தநாள் வழிபாடுகள் நடைபெற்றுவரும் இந்நாட்களில் இந்நிகழ்வு பங்குத்தந்தை அருட்திரு தேவராஜன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இளைஞர்களுக்கான ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளது. குறித்த ஒன்றுகூடலில் அந்தோனியார் ஆலய திருவிழாவினை தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையில் திருவிழாவினை எவ்வாறு சிறப்பாக நிகழ்த்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.