புதிய 1000 ரூபா தாளை இலங்கை மத்திய வங்கி அறிமுகம் செய்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவை விஜேராமவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூா்வ இல்லத்தில் சந்தித்து புதிய ரூபா தாள் ஒன்றை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் நேற்று அவருக்குப் பரிசளித்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநரும் பிரதமரும் நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.