யாழ்ப்பாணத்தில் வட இலங்கை மருந்தியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக மருந்தியலாளர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் கிறீன்கிராஸ் விடுதியில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட மருந்தியலாளர் சங்கத்தின் தலைவர் s.சிறீசண்முகவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண மருந்தியலாளர் கிருஷ்ணவேணி சுரேந்திரன் கலந்துகொண்டிருந்தார். உலக மருந்தாளர் தினத்தினை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் கடைமையாற்றும் மருந்தியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மருந்தியலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தற்காலத்தில் மருந்தியலாளர்களின் சேவை தொடர்பான விரிவுரைகளும் இடம்பெற்றது.
உலக மருந்தியலாளர் தின நிகழ்வில் யாழ் மாவட்ட மருந்தக உரிமையாளர்கள் மற்றும் யாழில் மருந்தியலாளர்களாக கடமையாற்றுபவர்கள் கலந்து கொண்டனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்