இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கொழும்பில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூா்வ ருவிட்டர் பக்கத்தில் இது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இந்தச் சந்திப்பின் நோக்கம் மற்றும் பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.