எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒக்டோபர் 7ஆம் திகதி நள்ளிரவு முதல் 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் 11ஆம் திகதி 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை நடக்கவுள்ளது.
பொதுப் பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் அதனுடன் தொடர்புடைய கலந்துரையாடல்களைத் தடை செய்யும் சட்டத்தின் பிரகாரமே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.