Wednesday 24th of April 2024 11:12:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
நல்லாட்சி போன்று நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்த அரசு ஒருபோதும் தலையிடாது!

நல்லாட்சி போன்று நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்த அரசு ஒருபோதும் தலையிடாது!


கடந்த நல்லாட்சி அரசு போன்று இந்த அரசு நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒருபோதும் தலையீடாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாதென பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் போது தொலைபேசி அழைப்பின் மூலம் நீதிமன்றிற்கு அழுத்தம் கொடுத்தமையை போன்று தற்போதைய அரசாங்கம் நீதிமன்றிற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரிந்து சாஃபி சஹாப்தீன் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE