Thursday 28th of March 2024 12:26:43 PM GMT

LANGUAGE - TAMIL
-
72 வேட்டொலிகளுடன் எஸ்பிபியின் புகழுடல் அடக்கம் செய்யப்பட்டது!

72 வேட்டொலிகளுடன் எஸ்பிபியின் புகழுடல் அடக்கம் செய்யப்பட்டது!


பிரபல தென்னிந்திய திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புகழுடன் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அவருடைய புகழுடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டுச்செல்லப்பட்டது.

தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிலேயே அவருக்கான இறுதிச் சடங்குகள் நடைபெற்றுள்ளன.

தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கத்தின் போது 24 காவலர்கள் மூன்று முறை வானத்தை நோக்கிச் சுட்டு 72 குண்டுகள் முழங்க மரியாதை செய்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE