வடமராட்சி கிழக்கில் சரித்திரப் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து 11 நாட்கள் நாகேஸ்வரப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார்.
ஆறாம் திருவிழாவான பாம்புத்திருவிழா முதலாம் திகதி வியாழக்கிழமையும், ஏழாம் திருவிழாவான கப்பல் திருவிழா 2 ம் திகதி வெள்ளிக்கிழமையும்,எட்டாம் திருவிழாவான வேட்டைத்திருவிழா 3 ஆம் திகதி சனிக்கிழமையும், ஒன்பதாம் திருவிழாவான சப்பறத்திருவிழா 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், பத்தாம் திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழா 5 ஆம் திகதி திங்கட்கிழமையும், பதினோராம் திருவிழாவான கேணித்தீர்த்தத்திருவிழா. 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்று வருடாந்த உற்சவம் நிறைவு பெறும்.
வருடாந்த உற்சவம் கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைக்கு அமைவாக நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்