திடீரென மயங்கி விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ். தொண்டைமானாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டைமானாறு பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
பெரிய கடற்கரை, தொண்டைமானாறில் வசித்து வந்த முல்லைத்தீவை சொந்த இடமாக கொண்டிருந்த அன்ரன் ஜோர்ஜ் (வயது 37) என்பவர் இன்று காலை 6.00 மணிக்கு கிணற்றடிக்கு சென்ற போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை பொலிசில் முறைப்பாடு மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையென்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், வடமராட்சி