Tuesday 16th of April 2024 12:33:15 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவால் 20 இலட்சம் பேர்  பலியாகலாம் என எச்சரிக்கை!

கொரோனாவால் 20 இலட்சம் பேர் பலியாகலாம் என எச்சரிக்கை!


கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு சாத்தியமான தடுப்பூசி ஒன்று கண்டறியப்படுவதற்குள் இந்தத் தொற்று நோயால் உலகெங்கும் சுமார் 20 இலட்சம் போ் பலியாகக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து சரியான போராட்டத்தை முன்னெடுக்காமல் இருந்ததால் உயிரிழப்புக்கள் அதிகமாகியுள்ளன.

இந்நிலையில் தொற்று நோய்க்கான தடுப்பு மருந்து கிடைக்கும் வரை உயிரிழப்புக்கள் தொடர்வதைத் தடுக்க முடியாது. சாத்தியமான தடுப்பு மருத்தொன்றை உருவாக்க இன்னும் சில காலம் எடுக்கலாம். அதற்கு கொரோனா சுமார் 20 இலட்சம் போ் வரை பலியெடுத்துவிடும். இது மிகவும் சோகமான ஒரு நிலை எனவும் உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட இயக்குனர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை 3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 9 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 2.4 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

உலகில் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE