சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டுபாயில் செயற்பட்டுவரும் குறித்த ஐ.சி.சி. தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் சிலருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதையடுத்து ஐ.சி.சி. தலைமைய அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா தொடர்பில் இறுக்கமான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தொற்று உறுதியான ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஐ.சி.சி. தலைமை அலுவலகத்தில் தொற்று நீக்க செயற்பபடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்