Friday 29th of March 2024 01:37:27 AM GMT

LANGUAGE - TAMIL
.
வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டிகள் மன்னாரில் மீட்பு!

வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டிகள் மன்னாரில் மீட்பு!


சட்டவிரேதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு வாகனமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயிரத்து 24 கிலோ மஞ்சள் கட்டி மூடைகள் பொலிசாரால் மீட்கப்பட்ட சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

மன்னார், பேசாலை விசேட புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ்வாறு கடத்திவரப்பட்டு பதுக்கை வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கட்டி மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் பிரதேசச் செயலகப் பிரிவில் உள்ள பெரிய கரிசல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகேந்திரா ரக வாகனம் ஒன்றில் இருந்தே நேற்றைய தினம் (26) சனிக்கிழமை மாலை பேசாலை பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

சுமார் 1024 கிலோ 200 கிராம் நிறையுடைய மஞ்சள் மூடைகள் இவ்வாறு பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் யாரும் இல்லாத நிலையில் இவ்வாறு கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்ட்டுவருகின்றது.

குறித்த மஞ்சள் இந்தியாவில் இருந்து கடத்தல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.

மேலும் பேசாலை பொலிசாரினால் ஒரு மாதத்தில் 3 மஞ்சள் கடத்தல் சம்பவங்கள் பிடிக்கப்பட்டு உள்ளதாக பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமிந்த சோமஜித் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE