இந்தியாவில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வின் துணைத் தலைவரும் மத்தியப் பிரதேச மாநிய முன்னாள் முதலமைச்சருமான உமா பாரதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தனது ருவிட்டர் பக்கத்தில் அவர் உறுதி செய்துள்ளார்.
எனக்கு கடந்த 3 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்தது. மருத்துவ பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அண்மைக் காலங்களில் தன்னோடு நெருக்கமாகப் பழகியவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் உமா பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் அருகே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் மீண்டும் நான்கு நாட்கள் கழித்து இன்னொரு முறை பரிசோதனை செய்து கொள்ளப்போவதாகவும் உமா பாரதி கூறியுள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா