வட, கிழக்கில் நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தனது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,
நாளைய கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் எவரும் கற்றல் செயற்பாடுகளில் பங்கெடுக்கமாட்டார்கள் என அறிவித்துள்ளது.
தேவையற்ற சில தரப்புக்கள் மாணவர்களை இலக்கு வைத்து சில சதி நடவடிக்கைகளில் ஈடுபடலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் வீடுகளிலோ விடுதிகளிலோ தங்கியிருக்க கேட்டுக்கொள்வதுடன் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்க்குமாறும் கோருவதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்