Thursday 25th of April 2024 05:19:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவில் கடைகளைத் திறக்குமாறு ஒலிபெருக்கியில் பொலிஸார் எச்சரிக்கை!

வவுனியாவில் கடைகளைத் திறக்குமாறு ஒலிபெருக்கியில் பொலிஸார் எச்சரிக்கை!


வவுனியாவில் கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தகர்கள் கடையடைப்பை மேற்கொண்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் வர்த்தக நிலையங்களுக்கு சென்று வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பொலிஸார் ஒலிபெருக்கியூடாக கடைகளை திறக்குமாறும் அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் கடை திறந்திருந்தமை தொடர்பாக அவரிடம் கேட்டபோது,

பொலிஸாரின் தலையீட்டின் காரணமாகவே கடையை திறந்ததாகவும் பின்னர் 9.30 மணியளவில் தான் கடையை மூடியதாகவும் தெரிவித்தார்.

இந் நிலையில் வவுனியாவில் ஒரு சில வர்த்தக நிலையங்களை தவிர அனைத்தும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE