கிளிநொச்சி பொலீஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக இன்றையதினம் (28) கிளிநொச்சி பொலீஸாரினால் ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பரந்தன் பூநகரி வீதியில் ஜந்தாவது மைல் கல் பகுதியில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளன. மீள பயன்படுத்த முடியாத நிலையில் குறித்த துப்பாக்கி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி