குவைத் நாட்டின் மன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 92வது வயதில் உயிரிழந்துள்ளார்.
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வைத்து சிறுநீர் பாதையில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு அவர் அடிக்கடி உடல்நல கோளாறு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவ்வாறே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து குவைத் மன்னரின் சகோதரரும் பட்டத்து இளவரசர் ஷேக் நவாஃப் அல் அகமது சபா (வயது-84) தற்காலிகமாக மன்னரில் அனைத்து பொறுப்புக்களையும் ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.