Friday 19th of April 2024 04:30:22 AM GMT

LANGUAGE - TAMIL
.
இந்திய கடலோடி ஒருவர் உள்ளிட்ட 6 பேருக்கு தொற்று உறுதி: இலங்கையில் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்திய கடலோடி ஒருவர் உள்ளிட்ட 6 பேருக்கு தொற்று உறுதி: இலங்கையில் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பு!


இந்திய கடலோடி ஒருவர் உள்ளிட்ட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்யை தினம் ஆறு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஓமானில் இருந்து நாடு திரும்பிய மேலும் 3 பேர், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய கடலோடி ஒருவர், ஓமானில் இருந்து இலங்கை திரும்பியுள்ள இந்திய கடலோடி ஒருவர் மற்றும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் என ஆறு பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவத்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்றைய தினம் எவரும் குணமடைந்து வெளியேறாத நிலையில் தற்போது வரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 230 ஆக உள்ளது.

தற்போது இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 137 ஆக உள்ள நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE