இலங்கையில் எலிக்காய்ச்சலால் (leptospirosis) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் எலிக்காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதாத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் 6,096 போ் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 7 0 போ் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரத்னபுரி மாவட்டத்திலேயே அதிக அளவானோர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் சுதத் சமரவீரா கூறினார்.
இலங்கையில் உள்ள 6,096 எலிக்காய்ச்சல் நோயாளிகளில் 1,341 இரத்னபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவா் தெரிவித்தார்.
அடுத்து அதிகளவானோர் அனுராதபுரம், கோகாலை, களுத்துறை மற்றும் பொலநறுவை ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் மேலும் கூறினார்.