Thursday 18th of April 2024 05:41:27 PM GMT

LANGUAGE - TAMIL
.
எம்.ரி.நியூ டயமண்ட் கப்பல் வெளியேற சூழல் பாதுகாப்பு அதிகார சபை தடை!

எம்.ரி.நியூ டயமண்ட் கப்பல் வெளியேற சூழல் பாதுகாப்பு அதிகார சபை தடை!


அம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீ பரவலுக்கு உள்ளான நிலையில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஆழ்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எம்.ரி.நியூ டயமண்ட் எண்ணெய்க் கப்பல் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடல் மாசுபாடு குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரே எம்.ரி.நியூ டயமண்ட் கப்பலுக்கு வெளியேற அனுமதி வழங்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சூழல் பாதுகாப்பு அதிகார சபை சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனைதெரிவித்தார்.

முன்னதாக தீப்பற்றி எரிந்த எம்.ரி.நியூ டயமண்ட் எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக் கோரல் பேச்சுவார்த்தைகள் நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE