கொரேனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நேற்றிரவு திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜயகாந்த் கடந்த செப்டம்பர் 24-ஆம் திகதியன்று லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் ஒக்டோபர் 2-ஆம் திகதி அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையிலேயே அவா் நேற்றிரவு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் 15 நாட்கள் கழித்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்காகவே விஜயகாந் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். விஜயகாந்த் நலமுடன் உள்ளார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த், அதற்காக சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் சில மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். தற்போது வீட்டில் ஒய்வில் உள்ள நிலையிலேயே அவா் கடந்த மாதம் கொரோனா தொற்றுக்குள்ளானார்.
தொடர்ந்து அவரது மனைவியும் தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதாவும் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா