இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜோ்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரங்களில் 14,542 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனா். புதிய நோயாளர்களுடன் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளர் எண்ணிக்கை 530,113 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்று 76 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் 42,445 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று ஸ்பெய்னில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 12 ஆயிரத்து 793 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 261 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி ஸ்பெய்னில் இதுவரை 8 இலட்சத்து 65 ஆயிரத்து 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32,486 போ் உயிரிழந்துள்ளனர்.
அதேபோன்று பிரான்சில் கடந்த 24 மணித்தியாலங்களில் 10 ஆயிரத்து 489 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கு பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 34 ஆயிரத்து 763 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 32,365 போ் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
ஜேர்மனியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 ஆயிரத்து 635 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 19 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றுடன் அங்கு மொத்தம் 3 இலட்சத்து 7 ஆயிரத்து 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,635போ் உயிரிழந்துள்ளனர்.