பிரான்ஸில் இதுவரை இல்லாதளவு ஒரு நாள் அதிகரிப்பாக நேற்று புதன்கிழமை 18,746 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபா் 3-ஆம் திகதி 16,972 புதிய தொற்று நோயாளர்கள் பதிவானதே இதற்கு முன்னர் நாட்டில் பதிவான மிக உயர்ந்தபட்ச ஒரு நாள் தொற்று நோயாளர் தொகையாக இருந்தது.
புதிய தொற்று நோயாளர்களுடன் பிரான்ஸில் உறுதிப்படுத்தப்பட்டமொத்த தொற்றுநோயாளர் தொகை 653,509-ஆக உயர்ந்துள்ளதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதன்கிழமை மேலும் 80 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் மொத்த கொரோனா பலி 32,445-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த நாட்களில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் 919 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 4,625 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறையினரின் தகவல்களின் பிரகாரம் பிரான்ஸில் 1,267 கொத்துத் தொற்றுக்கள் செயலில் உள்ளன. அவற்றில் 96 புதிய கொத்துத் தொற்றுக்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டறியப்பட்டன.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு