தென்மேற்கு ஈரானில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை எரிவாயு சிலிண்டா் வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அரச ஊடகமான ஐ.ஆர்.ஐ.பி. தெரிவித்துள்ளது.
எண்ணெய் வளம் நிறைந்த குஜெஸ்தான் மாகாணத்தின் தலைநகரான அஹ்வாஸ் நகரில் உள்ள சந்தை ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டத்திலேயே இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
வெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து வெளிவரும் வீடியோ காட்சிகளில் குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளில் மீட்புக் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளதையும் பலா் உயிருடன் மீட்கப்பட்டுவருவதையும் காண முடிகிறது.