பிரிட்டனில் நேற்று 12,872 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவா்களில் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்தைக் கடந்துள்ளது.
நேற்று வரை பிரிட்டனில் 6 இலட்சத்து 3 ஆயிரத்து 716 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்
அத்துடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை 65 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 42,825 ஆக உயர்ந்துள்ளது.
வடக்கு இங்கிலாந்தில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுபடுத்தும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
பிரிட்டனில் தொற்று நோயை அடுத்து மூடப்பட்ட பாடசாலைகள் செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டன. எனினும் பொதுவெளியில் 6 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து