Thursday 28th of March 2024 07:42:48 PM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியா வைத்தியசாலையில் சமூக இடைவெளி இல்லை! மக்கள் குற்றம் சாட்டு!

வவுனியா வைத்தியசாலையில் சமூக இடைவெளி இல்லை! மக்கள் குற்றம் சாட்டு!


வவுனியா பொது வைத்தியசாலையில் சமூக இடைவெளி பேணப்படாமல் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவிட்-19 வைரஸ் தாக்கம் நாட்டில் பரவலடைந்துவரும் நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு அரசினால் அறிவிக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வருகை தரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் அவர்களிற்கான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் சில சிகிச்சை பிரிவுகளில் போதிய இடவசதி இன்மையால் அதிகமான நோயாளர்கள் வருகைதரும் போது நெருக்கடியான நிலையும் ஏற்படுகின்றது.

இந்தநிலமையால் கோவிட் வைரஸ் தாக்கம் இலகுவில் பரவலடையக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொதுமக்கள் அனைவரதும் நலன்கருதி மாற்றுஏற்பாடுகளை செயற்படுத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE