உலகின் முன்னணி கால்பந்து வீரரான போர்த்துக்கலை்லைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமைஇன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து புதன்கிழமை ஸ்வீடனுக்கு எதிரான போர்த்துக்கல் நஷனல் லீக் ஆட்டத்தில் அவா் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போர்த்துகீசிய கால்பந்து சம்மேளனம் (PFF) வெளியிட்டுள்ள அறிக்கையில் ரொனால்டோ கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் அவரிடம் எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை. நலமாக உள்ளார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுளளது.
ரொனால்டோ கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஏனைய போர்த்துக்கல் அணியினர் இன்று செவ்வாய்க்கிழமை கொரோன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் புதன்கிழமை ஸ்வீடனுக்கு எதிரான போர்த்துக்கல் நஷனல் லீக் ஆட்டத்தில் அணியின் ஏனைய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்