Tuesday 23rd of April 2024 08:08:25 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஐபிஎல்-2020: ஹட்ரிக் வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் டெல்லி கப்பிட்டல்ஸ்!

ஐபிஎல்-2020: ஹட்ரிக் வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் டெல்லி கப்பிட்டல்ஸ்!


ஐபிஎல்-2020 ரீ-20 தொடரின் 30 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தி ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ள டெல்லி கப்பிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லி கப்பிட்டல்ஸ் அணி தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஆர்சர் வீசினார். முதல் பந்தில் பிரித்வி ஷா க்ளீன் போல்டானார்.

அடுத்து வந்த ரகானே 2 ஓட்டத்தில் ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்தில் 57 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர் 53 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 85 ஓட்டங்கள் குவித்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 ஓட்டங்களும், அலேக்ஸ் கேரி 14 ஓட்டங்களும் அடிக்க டெல்லி கப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பில் ஆர்சர் 4 ஓவரில் 19 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இரு வீரர்களும் அதிரடியாக ஆடினர். 9 பந்துகளை சந்திது 1 சிக்சர் 3 பவுண்டரிகள் உள்பட 22 ஓட்டங்கள் குவித்த பட்லர் நோர்ட்ஜீ பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 4 பந்துகளில் 1 ஓட்டத்தை மட்டும் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த சஞ்சுவ் சாம்சனுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ் அணியின் ஓட்ட எண்ணிழக்கையை மெல்ல உயர்த்தினார். 35 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்திருந்த பென் ஸ்டோக்ஸ் துஷார் பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்து வந்த ராபின் உத்தப்பா, சஞ்சுவ் சாம்சனுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடினார். 18 பந்துகளை சந்தித்த சஞ்சுவ் சாம்சன் 2 சிக்சர் உள்பட 25 ஓட்டங்களிலும், 27 பந்துகளை சந்தித்த உத்தப்பா 1 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 32 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்கள் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 148 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

18 பந்துகளை சந்தித்து 14 ஓட்டங்கள் எடுத்திருந்த ராகுல் தேவாட்டியா கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலும் நேற்யை ஆட்டத்தில் தோல்வியடைந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 8 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டும் பெற்று 6 புள்ளிகளுடன் 7வது இத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE