டுபாயில் பிறந்த குழந்தை ஒன்றை மருத்துவர் தூக்கிப்பிடித்து புகைப்படத்துக்கு காட்சி கொடுத்தபோது அந்தக் குழந்தை அழுதவாறு மருத்துவரின் முக கவசத்தை பிடுங்கும் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
டுபாய் மருத்துவர் சமீர் செயீப் தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து நாம் விரைவில் முககவசம் இல்லாத வாழ்க்கைக்குத் திரும்பப்போகிறோம் என கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தை ஆயிரக்கணக்கானவா்கள் விரும்பியுள்ளதுடன், பகிர்ந்து வருகின்றனர்.
எதிர்கால உலகில் முக கவசமில்லாத வாழ்க்கையை இந்தக் குழந்தை உணர்த்துவதாக உணர்த்துகிறது என்று பலர் இந்தப் புகைப்படத்தின்கீழ் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
இந்த படம் ஒக்டோபா் 5 ஆம் திகதி பதிவிடப்பட்டுள்ளது.