Friday 29th of March 2024 10:56:35 AM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியாவில் தனிமையில் இருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் தனிமையில் இருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!


வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு குறித்த குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் சம்பவ தினத்தன்று உக்கிளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இந்தநிலையிலேயே அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவரின் வாயில் இருந்து ஒருவகை நுரை வெளியேறியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியாப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE