வயிற்றுப் போக்கிற்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்ற குடும்பப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலன்னறுவை, திம்புலாகல, போகஸ்வெவ கிராமத்தை சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் கடந்த 11ம் திகதி பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி தொண்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அமைந்துள்ள விசேட கொரோனா சிறப்பு சிகிச்சை மத்திய நிலையத்தில் அவர் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி நிட்டம்புவை பிரதேசத்தில் தேரர் ஒருவர் நடாத்திய பாரம்பரிய கண் சம்பந்தமான கிளினிக் ஒன்றில் இவர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை