தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் நடிகர் அதர்வா தனது காதல் துணையை திருமணம் செய்ய உள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாணா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமாகிய அதர்வா தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். முரளியின் மகன் என்ற அடையாளத்தை கடந்து தனது நடிப்பு திறமையால் தொடர்ந்து தமிழ்த் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் அதர்வா.
இவரது தம்பியும் முரளியின் இளைய மகனுமான ஆகாஷுக்கும் விஜய்யின் உறவினரும், 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சிநேகாவுக்கும் சில வாரங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் அதர்வா கோவாவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகி இருந்த நிலையில் குடும்பத்தினர் சம்மதத்துக்காக காத்திருந்த அதர்வா அது கிடைத்துவிட்டதால் திருமணத்துக்கு தயாராகி விட்டார் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.