கொரோனா வைரஸால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டவா்கள் அதன் பக்க விளைவுகளை அதிக நாட்கள் அனுபவிக்க நேரும் என பிரிட்டனின் தேசிய சுகாதாரத்துறை முன்னெடுத்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் நபர்களுக்கு நபர் பக்க விளைவுகள் வேறுபடலாம். விளைவுகள் ஆட்கள் மற்றும் அவா்கள் வாழும் சூழல்களைப் பொறுத்து சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கலாம் எனவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று நோயின் நீண்டகால பாதிப்புகளுடன் வாழ்பவர்கள் மிகப் பெரிய உளவியல் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் பிரிட்டனின் தேசிய சுகாதாரத்துறை ஆய்வு முடிவு கூறுகிறது.
கொரோனாவால் லேசாக பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு வாரங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வாரங்களிலும் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைவதாக அறியப்படுகிறது.
ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் நீண்டகால பக்க விளைவுகளை எதிர்கொள்ளலாம் என பிரிட்டனின் தேசிய சுகாதாரத்துறை முன்னெடுத்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனாவின் நீண்டகால பாதிப்புகளால் சுவாசம், மூளை, இதயம், சிறுநீரகம், குடல், நுரையீரல் மற்றும் தோல் உள்ளிட்டவற்றில் நாள்பட்ட நோய்த்தொற்று அறிகுறிகள் தொடருவதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பக்க விளைவுகள் ஆட்களைப் பொறுத்து வேறுபடுகின்றன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பல வாரங்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் இருந்தவர்களை விட கொரோனா பாதிப்பே கண்டறியப்படாத சிலருக்கு மோசமான பக்க விளைவுகள் உள்ளதாக தெரிகிறது என இந்த அறிக்கை தயாரிப்பு குழுவை சேர்ந்த மருத்துவர் எலைன் மாக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நபருக்கு நபர் விளைவுகள் மோசமடைவது உறுதியாவதாகவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நீண்டகால பாதிப்புகளை கொண்டவர்களுக்கு மருத்துவரீதியிலான ஆதரவு மட்டுமின்றி சமூகத்திலும் ஆதரவு அவசியம் என பிரிட்டனின் தேசிய சுகாதாரத்துறை முன்னெடுத்த ஆய்வு முடிவுகள் பரிந்துரைக்கின்றன.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்